கண்ணாக வளர்த்து
பூவாகப் போற்றி
பேணி பாதுகாத்து
ஆளாக்கிய பெண்ணை
கயவன் என்று
அறியாமல் மணம்முடித்து
அவன் அவளை
சின்னா பின்னாமாக்கி
நையப் புடைத்து
சுட்டுக் குதறி
காயப்படுத்தி
உயிரைக் குடித்தான்
அழுதாள் மாய்ந்தாள்
நெருப்புக்குள் பாய்ந்தாள்
சருகானாள் சடுதியில்
திக்குத் தெரியாமல்
வாடுகின்றனர் பெற்றோர்
No comments:
Post a Comment