Thursday, October 24, 2013

சருகானாள்

கண்ணாக வளர்த்து 
பூவாகப் போற்றி 
பேணி பாதுகாத்து 
ஆளாக்கிய பெண்ணை 
கயவன் என்று 
அறியாமல்  மணம்முடித்து 
அவன் அவளை
சின்னா பின்னாமாக்கி 
நையப்  புடைத்து  
சுட்டுக்   குதறி 
காயப்படுத்தி 
 உயிரைக்  குடித்தான் 
அழுதாள்   மாய்ந்தாள் 
நெருப்புக்குள்  பாய்ந்தாள் 
சருகானாள்   சடுதியில் 
திக்குத் தெரியாமல் 
 வாடுகின்றனர்  பெற்றோர் 


No comments:

Post a Comment