பையில் துணி இல்லாமல்
கழுத்தில் தாலிச் சரடு இல்லாமல்
நெற்றியில் திலகம் இல்லாமல்
மெலிந்த உடலும்
தளர்ந்த நடையும்
கவலை தோய்ந்த முகமும்
இடுப்பில் குழந்தையுடன்
வேகையில் காசு இல்லாமல்
க மாக நடக்கிறாள்
அபலைப் பெண் மிரட்சியுடன்
அதே நேரத்தில் முடிவுடன் .
எங்கு செல்கிறாள்?
என்று பார்க்கின்
ஒரு பாழுங் கிணற்றை
நோக்கி நடக்கிறாள்
எதற்கு என்று யோசிக்க
வேண்டியதில்லை
நினைக்கும் முன்
தொபீர் என்ற சத்தம்
கூடவே ஓர் ஓலம்
அவளும் பச்சிளங் குழந்தையும்
நீரில்லாத கிணற்றுக்குள்
ஐக்கியம் ஆகி முக்தி அடைந்தார்கள்
வாழ்க சமுதாயம்
வளர்க தமிழ் திரு நாடு.
No comments:
Post a Comment