Friday, October 11, 2013

அபலையின் வாழ்விலே

பையில் துணி இல்லாமல்
கழுத்தில் தாலிச் சரடு இல்லாமல்
நெற்றியில் திலகம் இல்லாமல்
மெலிந்த உடலும்
 தளர்ந்த  நடையும்
கவலை தோய்ந்த  முகமும்
இடுப்பில் குழந்தையுடன்
 வேகையில்  காசு  இல்லாமல்
க மாக நடக்கிறாள்
அபலைப் பெண்  மிரட்சியுடன்
அதே நேரத்தில் முடிவுடன் .
எங்கு செல்கிறாள்?
 என்று பார்க்கின்
ஒரு பாழுங் கிணற்றை
நோக்கி  நடக்கிறாள்
எதற்கு என்று யோசிக்க
வேண்டியதில்லை
நினைக்கும் முன்
தொபீர்  என்ற சத்தம்
கூடவே ஓர் ஓலம்
 அவளும் பச்சிளங்  குழந்தையும்
 நீரில்லாத  கிணற்றுக்குள்
ஐக்கியம்  ஆகி முக்தி  அடைந்தார்கள்
 வாழ்க சமுதாயம்
வளர்க தமிழ் திரு நாடு.

No comments:

Post a Comment