Thursday, October 31, 2013

சூறாவளி

காற்று பலமாக வீச
மரங்கள் பேயாட்டம் ஆட
 மாட மாளிகைகள் சரிந்து விழ
சிறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்ல
மக்கள் குய்யோ முய்யோ என்று கதற
மின்னினைப்புக்கள் துண்டிக்கப்பட
எங்கும் இருட்டு  ஒரே கும்மிருட்டு
காற்று கொடுரமாக சுழன்று சுழன்று  ஆட
அங்கு ஒரு பெரும் போராட்டமே  நடந்தது
அச்சமுடன் அதிர்ச்சியுடன் உலகம் நின்றது
செய்வதறி யமால்   திகைப்புடன்.
காற்றி ன் கோபம் தான் என்னவோ?
ஏன்  இந்த வெறி? ஏன்   இந்த வேகம் ?
அழித்து துடைத்து  நாசம்மாக்கியது ஏனோ?
மனிதனின் பேராசையும் தான்தோன்றித்தனமும்
காரணம் என்று கொள்வோமா
வெட்கித் தலை குனிய வேண்டும்
மனிதனாகப் பிறந்ததற்கு

No comments:

Post a Comment