நான் அந்த வீட்டிலே பிறந்தேன்
செல்வ மகளாக வளர்ந்தேன்
பூவிலும் மென்மையாக கொண்டாடி
செல்வமும் செல்லமும் ஒருங்கே கூடி
தாயின் அன்பும் அரவணைப்புடன் ஆடிப்பாடி
கண்டிப்பும் கறாருடன் ஓடி விளையாடி
தந்தையின் கனிவும் கட்டுப்பாட்டுன் படித்து சிறக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
மகிழ்வுடன் வளர்ந்து கல்வியில் மேம்பட
சீருடன் சிறப்புடன் மண வாழ்க்கை அமைய
நான் பிறந்த வீட்டை விட்டு விலகினேன்
நாட்கள் செல்லச் செல்ல அந்த வீடு மாறியது
இருந்த ஒழுங்கும் நேர்மையும் முற்றும் மாற
பெற்றவர்கள் வாழ்ந்த முறை தலை கீழாக திரும்ப
செழிப்பு வறண்டு தேய்ந்து காய்ந்து போக
பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் பெருக
செல்வம் சொல்லாமல் . கொள்ளாமல் ஓட
என்னோடு பிறந்தவர்கள் யாவற்றையும் கைபற்ற
என் பிறந்த பங்கும் உரிமையும் என்னிடமிருந்து பறிக்க
விழி பிதுங்கி வழி நோக துடித்தேன் நான்
அச்சமயத்தில் ஏனோ
எந்தாய் தந்தையின் முகங்கள் தோன்றி மறைந்தன
செல்வ மகளாக வளர்ந்தேன்
பூவிலும் மென்மையாக கொண்டாடி
செல்வமும் செல்லமும் ஒருங்கே கூடி
தாயின் அன்பும் அரவணைப்புடன் ஆடிப்பாடி
கண்டிப்பும் கறாருடன் ஓடி விளையாடி
தந்தையின் கனிவும் கட்டுப்பாட்டுன் படித்து சிறக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
மகிழ்வுடன் வளர்ந்து கல்வியில் மேம்பட
சீருடன் சிறப்புடன் மண வாழ்க்கை அமைய
நான் பிறந்த வீட்டை விட்டு விலகினேன்
நாட்கள் செல்லச் செல்ல அந்த வீடு மாறியது
இருந்த ஒழுங்கும் நேர்மையும் முற்றும் மாற
பெற்றவர்கள் வாழ்ந்த முறை தலை கீழாக திரும்ப
செழிப்பு வறண்டு தேய்ந்து காய்ந்து போக
பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் பெருக
செல்வம் சொல்லாமல் . கொள்ளாமல் ஓட
என்னோடு பிறந்தவர்கள் யாவற்றையும் கைபற்ற
என் பிறந்த பங்கும் உரிமையும் என்னிடமிருந்து பறிக்க
விழி பிதுங்கி வழி நோக துடித்தேன் நான்
அச்சமயத்தில் ஏனோ
எந்தாய் தந்தையின் முகங்கள் தோன்றி மறைந்தன
No comments:
Post a Comment