Wednesday, November 6, 2013

எங்கு இருக்கிறானோ ?

தொழில்  செய்தான்
 என்ன   எது
 என்று தெரியாமல் .

 செலவழித்தான்  செல்வத்தை
ஏன் எதற்கு
 என்று  தெரியாமல்

பார்த்தார்கள்  யாவரும்
எப்படி எவ்வாறு
 என்று அறியாமல்

வியந்தார்கள்   எல்லோரும்
 செல்வம் வந்த வழி
 என்ன என்று புரியாமல்

புரண்டான் காசில்
தவழ்ந்தான்  பணத்தில்
தலை கால் தெரியாமல்

உருண்டான் தலை  குப்பற
 வெகு வேகமாக
எங்கு இருக்கிறானோ  தெரியவில்லை ?

No comments:

Post a Comment