நான் யாரென்று அறியேன்
என்னை ஒரு மரம் என்று நினைக்கலாமா
கூட வே கூ டாது மரத்தை என்னோடு ஒப்பிடலாமா
மரம் தரும் பலன்களை என்னால் தர முடியமா
நிழலும் பழமும் கனியும் தரும் விருட்சம்
நான் ஒரு கல் என்று கொள்ளலாமா
தவறு பெரிய தவறு கல்லாக நான் ஆக முடியுமா
காலத்தை வென்ற கல்லும் நானும் சரியாக முடியுமா
அதன் பொறுமை எங்கே நான் எங்கே
இப்பத்தான் உன்னை பற்றி தெரியுதா
என்று குறு நகையுடன் கேட்கிறாயா
உன்னுடைய கிண்டல் அர்த்தமுடையது
நான் ஒரு தேவையில்லாத ஜடம்
என்று எனக்கு நல்லாவே தெரியும்.
இருந்தும் வாழ்கிறேன் எனக்கு
விதித்த நாட்கள் முடியும் வரை.
No comments:
Post a Comment