Wednesday, November 13, 2013

நான் ஒரு ஜடம்

நான் யாரென்று அறியேன் 
என்னை ஒரு மரம் என்று நினைக்கலாமா
கூட வே  கூ டாது மரத்தை என்னோடு ஒப்பிடலாமா  
மரம் தரும் பலன்களை என்னால் தர முடியமா 
நிழலும் பழமும் கனியும் தரும்  விருட்சம் 
நான் ஒரு கல் என்று கொள்ளலாமா 
தவறு பெரிய தவறு கல்லாக நான் ஆக முடியுமா 
காலத்தை வென்ற கல்லும் நானும் சரியாக முடியுமா 
அதன் பொறுமை எங்கே நான் எங்கே 
இப்பத்தான் உன்னை பற்றி தெரியுதா 
 என்று குறு நகையுடன்  கேட்கிறாயா
உன்னுடைய கிண்டல் அர்த்தமுடையது  
நான் ஒரு தேவையில்லாத  ஜடம் 
என்று எனக்கு நல்லாவே தெரியும்.
இருந்தும் வாழ்கிறேன்  எனக்கு 
 விதித்த நாட்கள் முடியும் வரை.


  


No comments:

Post a Comment