Monday, November 25, 2013

நாட்டின் நடப்பு அவ்விதம்

அழுத குழந்தைக்கு
பால் கிடைக்கும்   சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும்  பட்டென்று


அடம் பிடித்த வளுக்கு
 ஆலிங்கனம்  அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
 ஓரு    மோதல்   கோபமாக


வெட்டிக் கொண்டு  போனவளுக்கு
அனுதாபம்  கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக

குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம்  தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம்  வீண் முட்டும்


நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம்   அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி  பாவம். மிகுதியாக

இது  தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு  நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும்  வெடிப்பு. பலவிதமாக

No comments:

Post a Comment