Thursday, November 21, 2013

உனக்கு எப்போது விடுதலை

கண்டேன் சீதையை
கண்டேன் அவள் கோலத்தை
கண்டேன் அவள் வி ர்க்தியை
 கண்டேன் அவள் ஏக்கத்தை.
 கண்டேன்   அவளின் எழிலை.

துவண்டு இருந்தாள் 
துணிவில்லாமல் இருந்தாள்
துணி போல் இருந்தாள்
துனபறு தப்பட்டிருந்தாள்
துடித்து  போயிருந்தாள் .

பெண்ணிற்கு  வரக் கூடாத துன்பம்
பெண்மையை  சோதித்த  கொடுமை
பெண்ணினத்தை   அவமானப்படுத்திய விதம்
பெண்கள் தலை குனிய வைத்த  உண்மை
பெண்ணே உனக்கு எப்போது  விடுதலை ?


கம்பன் காலம் முதல் பெண் ஓர் அடிமை
 இன்றும்  அவள்  ஓர் அபலை
 எப்போதும் அவள் ஒரு சுமை தாங்கி
 கண்ணீரும் கவலையும் அவளுக்கு சொந்தம்
  தாங்கி தாங்கி அவள் நொந்து போகிறாள்

No comments:

Post a Comment