Saturday, November 30, 2013

புது வாழ்வு

எதுவும் செய்யலாம்  என்ற போது 
எதுவும் செய்ய  முடியவில்லை 
ஏதுவும் செய்ய  முடியும் என்ற போது 
எதுவும் இல்லை செய்வதற்கு 
என்ன வாழ்க்கையோ தெரியவில்லை 
என்று சலித்துக் கொண்டே வாழ்கிற  போது 
சட்டென்று  ஒரு பிடிமானம் தென்பட்டது 
என்ன என்று குறுகுறுக்கும் மனத்திற்கு 
விடையாக ஒரு பச்சிளங் குழந்தை 
அழ முடியாமல் அழுது கொண்டு  கிடந்தது
அதை தூக்கி எடுத்துக்   கொஞ்சினவுடன்  
நெஞ்சில் இருந்த சலனம் பறந்து ஓடியது  
மனது  துள்ளிக் குதிக்க எண்ணங்கள்  விரைந்து ஓட  
என்னால் எல்லாம் முடியும் என்ற  நினைப்போடு
புது வாழ்வை தொடங்க ஆவலாய் உள்ளாள்  நிஜந்தா.  



No comments:

Post a Comment