Tuesday, November 5, 2013

தேவதையோ

 நிலவின் பட்டொளியிலே
வானவில்லின் வர்ண ஒளியிலே
இருட்டும் வெளிச்சமும்
அமைந்த  பொழுதினிலே
ஒர்  அழகிய பெண்
 ஒயிலாக வந்தாள்


சிவந்த நிறமும்
அடர்ந்த கூ ந்தலும்
வாளிப்பான் உட லும்
அளவான உயரமும்
பொருந்திய பெண் அவள்


கண்டோர் வியக்க
 கேட்டோர்  ஆனந்திக்க
பார்த்தோர்  புகழ
மயில் போல்
 ஓயாரமாக  வந்தாள்


அவள் ஒரு மயிலோ
 அவள் ஒரு அன்னமோ
அவள் ஒரு தே வதையோ
என்று மயங்கிய வேளையில்
மாயமாக மறை ந்தாள்.



No comments:

Post a Comment