Saturday, November 2, 2013

காலை வணக்கம்

காலை வணக்கம் என்ற குரல்
 எங்கேயோ கேட்ட  குரல்
யாரென்று கூற  இயலவில்லை
என்னைத் தெரியவில்லையா
 என்ற அடுத்த வந்தததற்கு
தடுமாறி பதில்  அளிக்கும் முன்
என்ன இவ்வளவு மறதியா
என்று வேகமான குற்றச் சாட்டு
உண்மயிலே மறதி வந்து விட்டதோ
அய்யய்யோ என்று எண்ணும் போது
மீண்டும்மொரு  தொடர்   மொழியாக
  ஏன்  இப்படி ஆகி விட்டாய்?
மலங்க மலங்க விழித்தபடி
 நின்ற என்னிடம் கேலியாக
உனக்கே உன்னை   தெரியவில்லை
என்று நகைக்க
 எனக்கு என் மேல் வெறுப்பு
தோன்றத  தொடங்கியது
நல்ல காலை வணக்கம் பாடி
மனத்தை  சுருங்க வைத்ததற்கு
நன்றி மிக்க நன்றி  .



No comments:

Post a Comment