Friday, November 29, 2013

கானல் நீர்

கானல் நீர் போன்று ஆனது வாழ்வு 
கனல் தெறி த்தது  கடு வாயிலே 
அனல் பற ந்த்தது வாழ்விலே 
அடித்துக் கிளப்பியது  காற்றிலே

 துவண்டு போனாள்  அவள் 
வெடித்துச் சிதறினாள்  துண்டு துண்டாக 
 விம்மி கதறினாள்  விக்கி விக்கி 
எல்லாம் போய்  விட்ட பின்  அழுது என்ன பயன்.?

கோபம் தலை  உச்சிக்கு ஏறிய போது 
தன்னை மறந்து தன நிலை உணராது 
பேசின பேச்சுக்கு வந்த வினை 
இன்று வாழ்வு இழந்த நிலை 

நிதானம் நியாயம் பார்த்து  நிற்காமல்  
தன் பிடிவாதத்தால் கொம்பாகிப்  போனாள்
வெற்றுக் கொடி  கூட அவள்  மீது படராமல்
பட்ட மரமாகிப் போனாள் நிஜந்தா .



No comments:

Post a Comment