Monday, November 18, 2013

கண்களும் வயிறும் தெறிக்க

பார்வை பல விதம்
 எண்ணமும் பல விதம்
நல்லதும் உண்டு 
கெட்டதும்  உண்டு 

கண்ணால்  அடிபடுவது
திருட்டி  என்று வழங்கப்படும் 
காலை வாங்கி கையை முடக்கி 
 உடம்பை படுத்தி சீரழிக்கும்.

கவலையைக் கொடுத்து 
செல்வத்தை பறித்து
வறுமையில் வாடி சொல்லொண்ணாத்
துயரத்தை உண்டாக்கும்.


வயிறும் அவ்வாறே   
வயிற்ரெ  ரிச்சல்  காவு வாங்கும் 
சாபமும் சாட்டையும் ஒன்றே
இரண்டும்  வகையான்   கொடுமை


கதை என்று நினைக்க வேண்டாம் 
 உண்மை நிகழ்ச்சி  ஒன்று 
ஒருவன் பார்வை   பட்டு 
அழகான கட்டிடடம்  பிளந்த்தது..


துவண்ட பெண்மணியின் 
ஆத்திரமும் ஆவேசமும் 
அவளை  நிலை குலைய  வைத்த
கயவர்களை  சாம்பலாக்கியது


நம்பவும் முடியவில்லை 
 நம்பாமல் இருக்கவும் இயலவில்லை
கண்டதை எழுதுகிறேன் 
 கேட்டதை கவியாக்குகிறேன்..

  

No comments:

Post a Comment