Monday, November 4, 2013

விட்டு விடாமல்.

தூங்கும்  போது 
அலை அலைகளாக 
 நினைவுகள் 
தூங்க விடாமல் 

கண் மூடி  உறங்கும் போது  
கனவுகள் படலம் படலமாக 
காட்சிகள்  பல 
அலைகழித்தன விடாமல் 

தூங்கும் போதில்லாமல் 
கனவு காணும் போதில்லாமல் 
நடக்கும் நிகழ்ச்சிகள் 
மனதை ஒன்று பட விடாமல் 

எதுவும் விட்டும் விடாமலும் 
எதிலயும் பட்டும் படாமலும் 
இங்கும் இல்லை அங்குமில்லாமலும் 
எதையும் விட்டு விடாமல் 

இருந்தவன் இன்று இல்லாமல் 
தெரிந்தவன் தெரியாமல் 
புடிந்தும் புரியாமல்  
பற்றிக் கொண்டு  வாழ்கிறான்  
மனிதன் விட்டு விடாமல்.


No comments:

Post a Comment