Saturday, November 2, 2013

காலனே பொறு

காலனைக் கண்டேன்
 காலை நேரத்திலே
கால் கடுக்க நிற்கிறேனே
உன் வரவை நோக்கி
 என்று கேட்கிறான்


சற்றுப் பொறு  காலனே
காலமும்  நேரமும் கூடட்டும்
வேலையும் முடியட்டும்
வருகிறேன் உன்னோடு
என்று சொன்னேன்.

என்னை இருக்கச் சொல்கிறாயா
காலப் பரிமாணம் புரியாமல் 
நான் வந்தவிட்டால்
 நேரம் முடிந்தது  என்று கொள்
 என்று சொன்னான்


நகைத்தபடியே  பகர்ந்தேன்
நான் காலத்தை வென்றவன்
நீ பொறு என்றால் பொறு
நான் யார் என்று நீ அறியவில்லை
என்று பதிலளித்தேன்

வெகுண்டான் காலன்
எனக்கே தவணை சொல்கிறாயா? என்றான்
நான் தான் மனிதன்    யாவற்ரையும்
தவணை  முறையில் வாங்குபவன்
சாவையும் கூட

No comments:

Post a Comment