Saturday, November 2, 2013

ஆகாத வரை சரி

பண வீக்கம் குறைந்தது
வெங்காயம் விலை ஏறியது 
பணக்காரன் பாடு மகிழ்ச்சி 
 ஏழையின்  நிலை  திண்டாட்டம் 

மத்தி ய வங்கியின் ஆளுநர் 
மந்திரக் கோலுடன் வலம்  வருகிறார்  
உழவனோ ஏறுடன் 
உழுது  பாடுபடுகிறான் 

ரூபாயின் மதிப்பு  ஏறகிறது  
  அன்னியச் செலவாணி உயருகிறது 
தானியங்களின் விலை தாவு கிறது 
  உணவு அரிதாகத்  தெரிகிறது.

பணக்காரன்  பணத்தில் புரளு கிறான்
ஏழையோ ஏழ்மையில் வாடுகிறான் 
மந்திரக் கோல்  தந்திரக் கோல் 
ஆகாத வரை சரி.


No comments:

Post a Comment