Sunday, November 24, 2013

மொழி மறந்தவன் தோலி இழந்தான் போல்.

தாய் மொழி  தாயைய்ப்  போல் அன்பானது
இன்னல் வரும் போது  நாம் சொல்வது அம்மா
வலி தாங்க முடியாத  போது  நாம் கதறுவது அம்மா
மொழியின் நினவு அதிகம் தோன்ற
 இன்று பிள்ளைகள் பேசும்
ஆங்கிலக் கலப்புடன் தமிழ்  பேச்சு
 என்னை  கண் கலங்க வைக்கின்றது.

 ஆதி தமிழன் தாயை ஆத்தா  என்று அழைத்தான்
 இன்றும் என் குழந்தைகள் என்னை அவ்வாறே  அழைக்க
 தந்தையை அப்பச்சி என்று  எங்கள் குல வழக்கப்படி கூப்பிட
  நாங்கள்  யாவரும் தமிழ் நாட்டை விட்டு மற்ற  நாடுகளில்  வாழ்ந்தாலும்
 அன்று  ஆத்தா மறைந்து அம்மா  தோன்றினாள் 
அம்மா இன்று இல்லை மமமி  ஆகி விட்டாள்
தமிழன் வெளக்காரனாகி விட்டான்  நிறத்தை தவிர.


நம் மொழியில் பேசுவது இயல்பு  மிக எளிது
தவறி விழுந்தோம்  என்றால் ஆத்தாடி என்போமே தவற
மம்மி  என்று நாம் ஒங் காரமிடுவதில்லை .
ஆங்கிலேயன் நம் நாட்டில் இருந்து கொண்டு போனான்
செல்வத்ததையும், பொன்னையும்,  உவகையும்
 விட்டுச் சென்றான் அடிமைத்தனத்தையும் கலப்படத்தையும்
மொழி மறந்தவன்  தோலி இழந்தான்  போல்.





No comments:

Post a Comment