Sunday, November 24, 2013

உங்களையும் இழுத்துக் கொண்டு

எழுத ஆரம்பித்தால்
 எழுதிக் கொண்டே இருப்பேன்.
என்ன எழுது வேன்
 எனக்குத் தெரியாது
  எதற்காக எழுதுகிறேன்
 எனக்கு புரியாது
 ஆனாலும் எழுது வேன்
 புரியாதத்தையும் தெரியாததையும்.

 வார்த்தைகள் வந்து விழுகின்றன
எண்ணங்கள் வந்து தொடும் போது
எண்ணங்கள் தன்னிச்சையாக தோன்றுகின்றன
காட்சிகள் மனக் கண்ணில் விரியும் போது
காட்சிகள் தெரிகின்றன வெளிச்சமாக
 கண்களை  பிரித்து நோக்கும் போது
கண்ணால் கண்டது எல்லாம்  வண்ணக் கோலங்கள்
 கவிதையில் புனையும் போது கொஞ்சி குலாவி கும்மாளமிடுகின்றன .
இராகமும் மெட்டும்  தாளமும் சேர்ந்தால்
மனதை மயக்கும்   சூழ்நிலை தன்னோலே வந்தமையும்
என்னுடைய எழுத்துக்கு விளக்கம் சொல்லப் போய்
எங்கேயோ போய் விட்டேன் என்னை அறியாமல்

No comments:

Post a Comment