காமத்தைவிட இழிவான ஒரு காணல்
பசி உடலிலும் மனதிலும் தகித்து
உண்ட பின் கழிந்து
அடைந்த பின் களித்து
சில நேரங்களில் குளித்து
பல நேரங்களில் சலித்து
கடந்து விடும் வெறுப்போடு
பதவியோ பொழுது முழுவதும்
காலம் நெடுகிலும் கொடி கட்டி பறக்கும்
ஆணவம் தலை விரித்தாடும்
திமிர் கோரத் தாண்டவமாடும்
செல்வச் செழிப்பு பெருக்கெடுத்துக் கிளறும் .
அலட்சியமும் அகங்காரமும் முரசு கொட்டும்
பதவி நீடுழி வாழ வகைக் கொடுக்கும்
வீழ்ந்தால் தான் மோகம் குறையும்
ஆனால் வீழ்வது எப்போது?
No comments:
Post a Comment