Saturday, October 12, 2013

மலையே விஞ்சும்

மலையைப் பார்த்து திகைக்க
 அதன் கம்பீரத்தை நோக்கி அசர
 அது தொடும் நீல வானத்தை கண்டு மிரள
அதில் குடியிருக்கும் பறவைகளின் குரலை
கேட்டு பரவசமாக
அங்கு ஏகாந்தமாக வாழும் மிருக இனத்தை சற்று
 பயம் கலந்த லயிப்புடன்  ஆனந்திக்க
அந்த கரு கரு வென்ற வளர்ந்த  மரங்களை
ஆசையுடன்  தழுவ
காய்த்து    குலுங்கும் பழங்களை எட்டி எட்டி
பறிக்க ஆவல் தூண்ட
மலையைக்   கண்டு வியந்து வியந்து  மலைத்து
 மலைத்து  விம்மிதம் அடைகிறான்
அழகை ஆராதிக்கும்  என்னைப் போன்ற மனிதன்

No comments:

Post a Comment