அழகான் முயல் ஒன்று கண்டேன்
வெள்ளை வெளேரென்று
வாயில் புல்லைக் கவ்விக் கொண்டு
துள்ளி குதித்து தாவி ஓடியது
துள்ளாட்டம் போட்டுக் கொண்டே
மலை மீது தாவி ஏறியது
தள்ளாட்டத்துடன் மெது மெதுவாக
கிழே உருண்டு வந்தது
பந்தைப் போல்
பார்த்தேன் பரவசமாக
பனிக்குவியல் போல்
தோற்றமளித்த குட்டி முயல்
என் மனத்தைக் கொள்ளைக் கொண்டது
என்னே ஒருஅற்புதமான அழகு.
No comments:
Post a Comment