Wednesday, October 30, 2013

முதலும் இரண்டாவதும் முழுவதும்

 பாட்டில் பொருள் கண்டான்
இசையில் இன்பம் அடைந்தான்
நாட்டியத்தில் சுகம் விளைந்தான்
நடிப்பில் மதி மயங்கினான்
தன்னை முதலாக  இழந்தான்

வடிவில்  அழகைக் கண்டான்
விளைவுகளில்  நிம்மதி அடைந்தான்
உடல் சூட்டில்  குலாவி மகிழ்ந்தான்
வண்ணங்களி ன்  ஜாலத்தில் மயங்கினான்
தன்னை இரண்டாவதாக இழந்தான் .

கோப்பையில் ரசனைக் கண்டான்
போதையில்  தஞ்சம் அடைந்தான்
நாகரிகத்தில்  த ன்னை மறந்து கூ த்தாடினான்
நிர்ணயத்தை தன்னை   அறியாமல்  விட்டு விடடான்
தன்னை முழுவதுமாக இழந்தான்


No comments:

Post a Comment