வானுயர்ந்த மலைகள்
அழகான நிலப் பரப்பு
அமைதியான கடல்
தெளிந்த நீரோடை
பசெலேன்ற விளை நிலங்கள்
என்று இருந்த இந்திய பூமி
இன்று
கல்லடிபட்ட குன்றுகள்
வெடித்த காய்ந்த நிலம்
ஆர் பரிக்கும் கடல்
கலங்கிய குட்டை நீர்
வாடிய நொந்த நிலங்கள்
என்று இருக்கும் இந்திய பூமி
எதனால் என்று சிந்திக்க
மனிதனின் செயலால்
அவனின் நடத்தையால்
அவனுடைய பேராசையால்
என்று உணர்ந்து நோக்குங்கால்
மனம் வெதும்புகிறது.
அன்றும் இன்றும்
No comments:
Post a Comment