Thursday, October 10, 2013

பிரித்து ஆள்

பிரித்து ஆள் 
 

வேண்டியது கிடைத்த உடன் 
வேண்டாத நினைப்பு வந்தது 
வேண்டியவருக்கு ஒன்று 
வேண்டாதவருக்கு இன்னொன்று 
என்று பாகுபடுத்தி 
ஒளித்து மறைத்துக் கொடுத்து 
தெரியாமல் பங்களித்து 
பகையை வளர்த்து 
வெறுப்பை வரவாக்கி 
வெகுண்டு எழச் செய்து 
கெடுத்து குட்டிச் சுவராக்கி 
ஒன்று சேர விடாமல் நாசமாக்கி 
குழப்பத்தை ஏற்படுத்தி 
கலக்கம் உண்டாக்கி 
கலாட்டா பண்ணினான் 
பெருந் தலைவன் 
பிரித்து ஆள் என்ற கூற்றுக்கு 
வழி அமைக்க ஏதுவாக



No comments:

Post a Comment