Friday, October 11, 2013

ஆலிலைக் கண்ணன்

பாடினான்  பரவசமாக
ஆடினான் ஆனந்தமாக
தன்னை மறந்து
 தன நிலை மறந்து
ஆடிப் பாடினான்

கண்ணீர் மல்க
 உதடுகள்    துடிக்க
இமைகள் படபடக்க
மெய் மறந்து
 ஆடிப் பாடினான்


ஆடும் போது
கண்ணா என்று  கூவினான்
கேசவா என்று அழைத்தான்
 அவன் கண் முன்னே
தோன்றினான் ஆலிலைக் கண்ணன்
குழந்தை வடிவிலே

No comments:

Post a Comment