Friday, October 11, 2013

பேசட்டும் தன்னோடு

வெட்ட வெளியில் அமர்ந்து
தன்னாலே பேசும் மனிதனை
 கிறுக்கன் என்று சொல்லலாமா
 வேண்டாம் மனிதனே
 அவன்  கிறுக்கன் அல்ல
 வம்பு வேண்டாம்  என்று
அவன் நினைக்கிறான் போலும்
இல்லை பேசி பேசி
 எதைக் கண்டேன்
என்று எண்ணுகிறான் போலும்
தன்னோடு பேசி
 மனத்தை ஆற்றிக்  கொள்கிறான்
 பாவம் அவனை விட்டு விடுங்கள்
பேசட்டும்  பேசிக்கொன்டிருக்கட்டும்
அல்லலை பகிர்ந்து கொள்ளட்டும்
 இன்பத்தில் பங்களிக்கட்டும்
அழுகட்டும் சிரிக்கட்டும்
அனுபவிக்கட்டும்  நலன் கருதி
அவன் பேசட்டும் தன்னோடே

No comments:

Post a Comment