Thursday, October 10, 2013

அந்தோ பரிதாபம்

அந்தோ பரிதாபம் 
 

கடை வாயில் எச்சி ஒழுக 
கண்ணிலே நீர் வடிய 
காய்ந்த உதடும் 
சிந்தின முக்கும் 
சிடுக்குப் பிடித்த முடியும் 
கிழிந்த ஆடையும் 
அழுக்குப் படிந்த தேகமும் 
கொண்ட ஒரு சிறு பெண் 
சாலை ஓரத்தில் கிடந்தாள். 
மயக்கமுற்று 

நாதியற்ற குழந்தை அவள் 
தாயும் இல்லை 
தந்தையும் ஓடி விட்டான் 
அவளைத் தவிக்க விட்டு 
கேட்பார் யாரும் இல்லை 
பார்ப்பார் எவரும் இல்லை 
சோறும் இல்லை தண்ணீரும் இல்லை 
காய்ந்து சருகாகிப் போனாள் 
பூவாக மலர வேண்டிய பெண். 
அந்தோ பரிதாபம்



No comments:

Post a Comment