என் வெளிப்பாடு
தனித்து வாழ்கிறேன்
தனிமையில் ஒரு இனிமை காண்கிறேன்
எதிலும் ஒரு தனித்துவம்
அதிலே ஒரு நிறைவு அடைகிறேன்
பிறரை எதிர் பார்க்காத
தனி வழிப் பயணம் போகிறேன்
உதவியை நாடாத
ஒரு உறுதியான ஏற்பாடு உள்ளடக்கினேன்
தன கையை நம்பி
வாழப் பழகிய நெருடலான் நேரங்களில்
தன காலில் நின்று
தன உழைப்பில் சம்பாதித்து
கௌரவமாக வாழும் அனுபவம் பெற்றேன்
எனக்கு எல்லாமே ஒரு சவால்
வாழ்க்கையே ஒரு போராட்டம் என்றாகியபோது
எதிர் நீச்சல் போட்டு
தவ்வி தாவி குதித்து ஓடுகிறேன்.
வெற்றியை நோக்கி செல்கிறேன்
கிட்டி விடும் என்ற உறுதியான நம்பிக்கையில்
வாழ்ந்து விட்டேன் இந்நாள் வரை
வாழ்வேன் சாகும் வரை.
சுயமாகத் நிமித்தங்களை எதிர்கொண்டேன்
No comments:
Post a Comment