Thursday, October 10, 2013

ஞாயிறு விடிகாலைப் பொழுது

விடியலிலே வைகறைப் பொழுதிலே 
காகம் ஒன்று கரைந்தது 
இடை விடாமல் கா கா என்று 
விடிந்த சற்று நேரத்திலே 
குருவிகள் குரல் கொடுத்தன 
நொடிக்கொரு வினாடியில் 
சற்றுத் தள்ளி கழுதைகள் கத்தின 
சுருதி பேதத்துடன் 
எதிர் முனையில் குதிரைகளின் 
குளம்புச சத்தம் டக் டக் என்று 
ஒலித்தன தாள லயத்துடன் 
நாய்களோ செல்லமாக 
குரைத்தன விட்டு விட்டு 
தெருவிலே காய் விற்பவர்கள் 
காயோ காய் என்று 
இராகத்துடன் அழைத்தார்கள் 
தாய் குலமோ சமையலில் 
நிதானத்துடன் செயல்பட்டார்கள் 
குக்கரின் ஒலிக்கும் 
மிக்சியின் கரகரப்பான 
இரைச்சலுக்கும் நடுவில் 
ஆண்களோ செய்திதாளின் 
தலைப்புக்களை அலசி ஆராய்ந்து 
காப்பியை உறிஞ்சிக் கொண்டே ரசிக்கிறான் 
ஒரு அற்புதமான ஞாயிறு 
விடிகாலைப் பொழுதை



No comments:

Post a Comment