விடியலிலே வைகறைப் பொழுதிலே
காகம் ஒன்று கரைந்தது
இடை விடாமல் கா கா என்று
விடிந்த சற்று நேரத்திலே
குருவிகள் குரல் கொடுத்தன
நொடிக்கொரு வினாடியில்
சற்றுத் தள்ளி கழுதைகள் கத்தின
சுருதி பேதத்துடன்
எதிர் முனையில் குதிரைகளின்
குளம்புச சத்தம் டக் டக் என்று
ஒலித்தன தாள லயத்துடன்
நாய்களோ செல்லமாக
குரைத்தன விட்டு விட்டு
தெருவிலே காய் விற்பவர்கள்
காயோ காய் என்று
இராகத்துடன் அழைத்தார்கள்
தாய் குலமோ சமையலில்
நிதானத்துடன் செயல்பட்டார்கள்
குக்கரின் ஒலிக்கும்
மிக்சியின் கரகரப்பான
இரைச்சலுக்கும் நடுவில்
ஆண்களோ செய்திதாளின்
தலைப்புக்களை அலசி ஆராய்ந்து
காப்பியை உறிஞ்சிக் கொண்டே ரசிக்கிறான்
ஒரு அற்புதமான ஞாயிறு
விடிகாலைப் பொழுதை
No comments:
Post a Comment