Thursday, October 10, 2013

சருகாக உதிர்ந்த இலைகள்

சருகாக உதிர்ந்த இலைகள் 
 

இலைகள் சலசலவென்று காற்றில் 
அசைந்து ஆடின 
ஆடும் போதே ஒன்றிரண்டாக 
உதிர்ந்தன 
பழுப்பும் பச்சையும் கலந்து 
மண்ணில் பரவின 
பழுத்த இலைகள் மிகுதியாகவும் 
பச்சில இலைகள் குறைவாகவும் 
வீழ்ந்தன சருகாக 
நியதிகளை சீர் தூக்கின் 
வேறுபாடு விரியும் 
இயற்கையே மாறுபட்டு நிற்குங்கால் 
மனித இனம் அறிய 
முதியவர்கள் இறப்பதோடு 
பால் மணம் மாறா குழந்தைகளும் 
கண் இமைக்க மறக்க முடியம் போல் 
கேட்பதற்கு சங்கடம் 
பார்ப்பதோ துன்பம் 
நடக்கிறது கொடூரங்கள் 
நிறுத்த முடியாத தருவாயில்.



No comments:

Post a Comment