Monday, December 16, 2013

காதல் என்றால்

காதல் வரும்முன் 
திருமணம் வந்தது 
திருமணத்தை அறியும் முன் 
குழந்தை பிறந்தது 
குழந்தையை வளர்க்கும் முன்  
அடுத்து ஒன்று உண்டானது 
அதை பெற்றவுடன்  
 மற்றொன்று பிறக்க நேரிட்டது 
 குடும்பம் பெருத்தது 
பொறுப்பும்  வந்தது 
உழைப்பு மிகுந்தது 
உடல் பாதித்தது 
வயது ஏறியது 
முதுமை  ஆட்கொண்டது 
கை நடுங்கியது 
அணைக்க முயலும் போது 
கால் பின்னியது 
அருகில் நெருங்கிய போது 
உடல் துவண்டது 
அருமை அறியும் போது 
கண்ணை  மூடும் வரை 
 காதலிக்கவே முடியவில்லை .
 

No comments:

Post a Comment