காதல் வரும்முன்
திருமணம் வந்தது
திருமணத்தை அறியும் முன்
குழந்தை பிறந்தது
குழந்தையை வளர்க்கும் முன்
அடுத்து ஒன்று உண்டானது
அதை பெற்றவுடன்
மற்றொன்று பிறக்க நேரிட்டது
குடும்பம் பெருத்தது
பொறுப்பும் வந்தது
உழைப்பு மிகுந்தது
உடல் பாதித்தது
வயது ஏறியது
முதுமை ஆட்கொண்டது
கை நடுங்கியது
அணைக்க முயலும் போது
கால் பின்னியது
அருகில் நெருங்கிய போது
உடல் துவண்டது
அருமை அறியும் போது
கண்ணை மூடும் வரை
காதலிக்கவே முடியவில்லை .
No comments:
Post a Comment