Friday, December 27, 2013

தண்ணீர் எங்கே?

தண்ணீர்  எங்கே  என்று ஏங்குகிறோம்  
தண்ணீருக்கு வழியில்லாமல்  தவிக்கிறோம் 
நீர் நிரம்பிய ஆற்றைக்  கண்டில்லோம்
கேணிகள் இன்று எங்கும் அறியோம்.


கிராமத்துக்கு மூன்று   கண்மாய் 
 வீதிக்கு  ஒரு நல்ல தண்ணீர்  கிணறு 
 ஊரைச் சுற்றி ஒரு  வற்றாத ஆறு 
யாவையும் ததும்பும் நீர் வளத்தோடு..
கண்டோம் அன்று.

வீட்டிற்கு நான்கு ஆழ்கிணறு 
வீதிக்கு ஓர் அடி குழாய் 
ஊரைச்   சுற்றும் ஒரு வறண்ட ஆறு 
யாவற்றிலும்  வற்றிய  ஊத்து
காண்கிறோம் இன்று.


தண்ணீர்ப பந்தல் அமைத்து  
வரு வோருக்கெல்லாம்   தாகம் தீர் த்து
மகிழ்ந்த தமிழர்களை  இன்று கண்டில்லோம் 
குடத்துனும் பானைகளுடனும்  அலையும்
பெண்டிரைக்   காணும் போதில் துணுக்க்குற்றோம்.

ஏன்   இந்த நிலை ? என்று எண்ணும் போது  
 நம்முடைய   அளவில்லா ஆசையும் 
 வளமான நிலத்தை  பாழாக்கும்  நோக்கும்  
 எதிலும்  பணத்தைக்  கருதும் உணர்ச்சியைக் கண்டு 
வகையறி யாத  வேதனையுடன் கலங்குகிறோம்     

 
 
 

No comments:

Post a Comment