Sunday, December 29, 2013

காதல் எழுத்திலே

கண்ணிலே காதல் மின்ன
நெஞ்சிலே உவகை   கூட
நின்றாள்  மரத்தடியிலே 

கண்ணிலே குறும்புத்  தெரிய
 நெஞ்சிலே மகிழ்வு கூட
  மறந்து நின்றான் மரத்தின் பின்னாலே .

வழி மேல் விழி வைத்து
கால் கடுக்க நின்றாள்
வண்ண மயில்  அவனுக்காக .

 பின் நின்று முன் வரத் துடிக்க
 கால் முன் வர மறுக்க
கட்டிளங் காளை    மறுகினான் அவளுக்காக

கண்ணா மூச்சி   விளையாட்டுத் தொடர
அவளும் அவனும் உருக
வெளிக் கொணர முடியாத  தருணம்

எத்தனயோ காதல் இவ்வாறு அழுந்தி
மனதின் ஆழத்தில் உழல
காவிய்ங்கள் உருவாகி  வலுப்பெற

வாழ்க்கையில் காணாத சுகத்தை
 எழுத்தில் கண்டோம் 
மனம் கண்ட களிப்பு .




No comments:

Post a Comment