ஒலிகளின் ஓசையில்
மயங்கி நின்றேன்
ஒளிகளின் பிரகாசத்தில்
தோய்ந்து நின்றேன்
ஒளியும் ஒலியும்
எழுப்பும் விகிதங்களில்
மலைத்துப் போய்
சிலிர்த்து சமைந்தேன்.
ஒலிகள் பாட்டாகவும் இசையாகவும்
குரல் வழியாகவும்
கருவிகள் மூலமாகவும்
பறவைகளின் ஓசையாகவும்
குழந்தையின் மழலையாகவும்
பெரியோர்களின் ஆசியாகவும்
நோக்கி வரும் போது
சிலாகித்து மயங்கினேன்.
ஒளிகள் வண்ண மயமாகவும்
கண்களுக்கு அழகாகவும்
குளிர்ச்சியாகவும் குளுமையாகவும்
செடி கொடிகளின் பசுமையும்
கடலின் நீல நிறமும்
ஆகாயத்தின் வெண்மையும்
பரந்த மணற்பரப்பின் செம்மையும்
கண்டு புளாங்கிதம் அடைந்தேன்.
ஒலிகள் வித்தியாசமான்
சத்தங்களி எழுப்பி
கூ ச்ச்சலும் கத்தலுமாகி
ஒளிகள் கண்ணைப் பறிக்கும்
விதமான கோலங்களில் தோன்றி
விகார விகிதங்கள் கூடி
செவித்திறனும் கண் பார்வையும்
பறிபோகும் நிலை அறிந்து
மனம் பேதலித்து பின்னடைந்தேன்.
மனிதனின்அறிவின் மீது
ஏள்ளளவும் ஐயமில்லை எனக்கு
அவனின் செய்கையில்
தோன்றும் அலட்சியமும்
தான் தான் என்ற நினைவும்
மற்ற எதைப் பற்றிய சிந்தனையும்
அறவே மறந்த விட்ட தன்மையும்
என்னை வெகுவாகப் கலங்க வைக்கிறது
கை பிசைந்து நிற்கிறேன் தன்னாலே
No comments:
Post a Comment