Saturday, December 28, 2013

வருத்தம் மிகுகிறது

நாகரிகமான இந்நாட்களிலே
செயல்கள் பல நாணச  செய்ய 
தலை குனிந்து  செல்ல  வேண்டிய  போது
நாம் நிமிர்ந்து நடக்கிறோம் .

சுற்றுப்புறத தூய்மை அறவே நினையாமல்
எவ்விடத்திலும் காறித் துப்பி
நினைத்த் இடத்தில் இயற்கை உபாதைகளை  கழி த்து 
நாம் பெருமையுடன் நடக்கிறோம்.

 கழிவுகளை அகற்றாமல் தெருவில் குவித்து
  எதையும் எங்கு  என்று பாராமல் எறி ந்து
 அவற்றை எரித்து கரும் புகையை உண்டாக்கி
நாம் பெருமிதத்துடன் நடக்கிறோம்..

நமக்கு ஏன் இவ்வளவு  பெருமை ?
நமக்கு எதற்கு இத்தனை மகிழ்ச்சி ?
நம்மை எண்ணினால் வருத்தம் மிகுகிறது
இருந்தும் நாம் தலை தூக்கி நடக்கிறோம்.


No comments:

Post a Comment