Monday, December 16, 2013

மனமே, மனமே !

மனமே நீ எங்கு இருக்கி  றாய் ?
 மனிதனிடம்  என்று நீ சொல்வாய்
எந்த  மனிதனிடம்  காண்போம் உன்னை ?
நின்று நிதானமாக சொல்
 நான் காத்திருக்கிறேன் .


யோசிக்கிறாய் பலமாக
 நினைத்துப்  பார்க்கிறாய்    வெகு நேரமாக
உனக்கே குழப்பம்  வருகிறது
என் சொல்வேன்  மனமே
நான்  இன்னும் காத்திருக்கிறேன் .


காத்திருக்கும் போது நினைக்கிறேன்
மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இருக்கிறதா ?
இருந்தால் ஏன் இவ்வளவு கலகம், யு த்தம்
பொறாமை,  திருடு, பேராசை  என்று
நான் திரும்பிப்  பார்த்தேன் .


மனம், மனம் என்று கூக் குரலிடுகிறேன்
எங்கும் காணேன்  தேடினேன்  எங்கும் இல்லை
ஏன்  ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய் ? மனமே
அறிந்து  கொள்கிறேன் சடுதியில்
 மனம் என்று ஒன்று இன்று இல்லை


No comments:

Post a Comment