Sunday, December 1, 2013

பிறந்து மடிவது நிர்ணயமே

வாடின பூ  என்னிடம் சொன்னது
என் என்னை பார்த்து ஒதுங்குகிறாய் என்று?
நான் வதங்கிப் போனேன் என்று தானே ?
 நான் சருகாகிப் போனேன் என்று தானே ?
 நான் பொலிவிழந்து கிடக்கிறேன் என்று தானே?

நான் பதிலுரைக்கும் முன்
 மீண்டும் பேசியது அழாக்  குறையாக
நேற்றுக்கு முந்திய நாள்  நான்
ஓர் அழகான மொட்டு  விரிய  காத்திருக்க
விடியும்  முன்  மெல்ல விரிந்து விட்டேன்  நேர்த்தியாக


நேற்றைய தினம் அ ன்றலர்ந்த மலராகத்  தோன்றி 
கண்டோரும் காணப் போவோரும்   வியந்து மகிழ
மெலிந்த காம்பிலே மொட்டவிழ்த்து   மனம் பரப்பினேன்
தென்றல் காற்றிலே அசைந்து ஆடி  இதமாகத் தவழந்தேன் 
என் அழகிலே நானே மயங்கி னேன் அன்று போதும்  முழுமையாக .


இன்று நான் ஆகாமல் தரையில்  விட்டேரறியப்பட்டுள்ளேன்
என் நிலைமை கண்டு உனக்கு ஏளனமோ!
 வாழ்வே இது தான் புரிந்து கொள் மானிடனே !
 இன்று இருப்பது நாளை இல்லை  யாவும்
மனிதனும், பொருளும் பிறந்து  மடிவது  நிர்ணயமே 

 




No comments:

Post a Comment