Saturday, December 21, 2013

அன்பே அழகே ஆராவமுதே

காணவில்லை உன்னை
காண விளைந்தேன் உன்னை 
  கண்டு கொள்ளவே  இல்லை நீ 
கண்டும் காணாமல் போனாய்

கோபம் தான் என்னவோ?  
குறை தான் எதுவோ?   
சொல்லாமல் செல்கிறாயே கண்மணி  
 ஏன்  என்று புரியவில்லயே!.

உன்னை  கண்ணின் இமை போல் காத்தேன் 
பூவாக எண்ணி ஆராதித்தேன் 
பொன்னாக கருதி மயங்கினேன்
  ஏன் இந்த பாராமுகம்?  

நான் செய்த தவறு தான் என்னவோ?
என் குற்றம் ஏதேனின் சொல் அன்பே 
திருந்தி வாழ்  ஆர்வம் கொண்டுள்ளேன் 
இந்த  ஒரு தடவை  மன்னிப்பாயாக 

தெரியாமல் பல் நிகழ்வுகள் காயப்படுத்தியி ருக்கும் 
  தெரிந்து சில நிகழ்ச்சிகள் புண் படுத்தி யிருக்கும் 
அறியாமல் செய்த பிழைகளை  மன்னித்து  
அறிந்து செய்தவைகளை கண்டித்து  
என்னை உன்னோடு பிணைத்துக்  கொள்ளடி  கண்ணே !


No comments:

Post a Comment