Wednesday, December 11, 2013

என் தாய்த் திரு நாடு

கவின் மிகு மலையும்
நிலவண்ணக்  கடலும்
நீண்டமணற்  பரப்பும்
பசுமையான நிலமும்
நெடிதுயரந்த  மரங்களும்
கொட்டும் அருவிகளும்
சலனமின்றி ஓடும் ஆறுகளும்
அமைதியான மக்களும்
நிறைந்த தமிழ் நாட்டிலே
 செம் மொழி பேசும் போதினில்
கனிந்துருகி அழகான நடையிலே
அருமையான சொற்களிலே 
நெக்குருகி   பாடிய  பாடல்கள்
எத்தனை எத்தனையோ
திருவாசகத் தெள்ளமுது
உருகாத  மனத்தையும்   உருக்க  
தேவார   சொல்லமுது
மனதில் நுழைந்து  பரவசமுட்ட 
தெய்விகம் கமழும்  இத் திரு நாட்டிலே
விஞ்சும் அருளுனர்வும்
எஞ்சும்  நெறி முறைகளும்
நெஞ்சை சொக்க வைக்க
என் தாய் திரு நாடு  இதுவே
 என்று பெருமிதம் கொண்டு
வலம்   வரும் என் போன்றோர்க்கு
எளிமையான  வாழ்வு  எழுத்தால் வலிமை 
பேச்சால் சுகம் விளைய  இதம் தவழ
  வேண்டும் என்று வேண்டி நிற்கிறேன்
 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி 








No comments:

Post a Comment