Monday, December 30, 2013

நட்சித்திரங்களே நட்சித்திரங்களே

 வானில் மின்னும் நட்சத்திரங்களே 
இரவை  ஒளி மயமாக்கும்  சித்திரங்களே  
துள்ளிச் சிதறும் கோலங்களே 
நீவீர்   எவ்வாறு நின்று நிடிக்கிறீர் ?  

கருமையில் தோன்றும் அழகுக் கூட்டமே 
தீப் பொறி போல் வட்டமிடும் சுடரே  
அங்கு ஒன்று இங்கு ஒன்றாகச் காட்சித்  தரும் பாங்கே 
நீவீர்  எப்படி திரண்டு  நிற்கிறி ர் ?

கார்மேக வண்ண மேகக் குவியலிலே 
ஓடி விளையாடும்  மினமினி தொடர்களே 
அவ்வப்போது கண்ணா முச்சி ஆடும்  விழிகளே 
நீவீர்  என்ன விதத்தில் தோன்றி மறைகிறிர் ? 

நட்சத்திரங்களே  வண்ண வானவில்லில் 
கோலோச்சும்  ஆனந்தச்   சிகரங்களே 
அற்புதமான  பொலிவிலே மெருகூட்டும்  திருவே   
நீவீர்  எங்கிருந்து இவ்வனவு அழகை கொணர்ந்தீர்?



No comments:

Post a Comment