Tuesday, December 10, 2013

கண்டேன் உலகை அவ்வவாறே

அடக்கம் காணேன் எங்கும்
அமைதி காணேன் இங்கும் 
 சாதனைகள் செய்வோர் 
ஆட்டமும் பாட்டமும் 
 கலந்த அதிகாரம் 
கண்டேன் இங்கும் அங்கும் .

கண்ணிலே நீர் எதற்கும் 
முகத்திலே கவலை  இதற்கும் 
காரியம் கை கூடா  விடில் 
துயரம் அதி களவு பொங்க
நெஞ்சம் விம்மி வெடிக்க  
கண்டேன் அதற்கும் இதற்கும் .

சீற்றம் எழும்பியது சட்டெ ன்று  
சென்ற வழி  திரும்பியது  பட்டென்று 
நினைத்தது  நடக்கா விடில்
அடிதடியில்  இறங்கி கலகம் கொணர    
கொலை வெறியில்  களமிறங்கி 
கண்டேன்  குருதியும் சாவும் ,

சுற்றுகிறது  உலகம்  எப்போதும்
பகலும் இரவும் மாறுகிறது   எப்பொழுதும் 
கடலும் கொந்த ளிக்கிறது அவ்வப்போதே 
காற்றும் புயலாக சீறுகிறது  சில நேரங்களிலே 
நெஞ்சமும் ஏறி   இறங்குகிறது  எந்நேரமும்
 கண்டேன்  விநோதங்களை  அந்தப் போதினில் 


No comments:

Post a Comment