Monday, December 16, 2013

பாடம் புகட்டிய விதம்

அழகிய மலர் ஒன்று கண்டேன்
நறுமணம் பரப்பும் விகிதத்தை நோக்கினேன்
 பட்டு இதழ் ஒன்றை தொட்டேன்
பஞ்சை விட மென்மையான  நிலையை அறிந்தேன்
பச்சை இலை ஒன்றை  தடவினேன்
வழுக்கும் நிமித்ததை   தெரிந்து கொண்டேன்
நீண்ட கொடியை   வருடினேன் 
நெக்குருகும் தன்மையை உணர்ந்தேன்
பொடிதான வேரை துழா வினேன் 
  அதன் பிடிமானத்தை எண்ணி வியந்தேன்
சிறு செடி என்று நினைத்தேன்
அது எனக்கு பாடம் புகட்டிய விதமே  அருமை



No comments:

Post a Comment