Tuesday, December 31, 2013

இது ஒரு வகை மண் வாசம். .

.பெருந் தொழிலுக்கு கைமாற்று வாங்கினான்
சிறிய விகிதத்தை   இழந்தான் தொழிலில்
 இருந்தும் பேசப்பட்டான் கடன்காரன் என்று .

பேசினவர்கள்  வேறு   யாரும் இல்லை
அவன் தன உடன் பிறந்தவர்கள்
கொக்கரித்தார்கள்  இவனைப பார்த்து

கேலி பேசினார்கள் வெகுவாக
ஏளனம் செய்தார்கள்  மிகுதியாக
அவர்களின் நிலை அறியாமல்

பட்டறி வும் படிப்பறிவும்  இல்லாதவர்கள் 
அட்டகாசமாக  சிரித்தார்கள்  ஆர்ப்பரித்தார்கள்
குடும்பச் சொத்தை  அப்படியே அபகரித்த பின்.

நீடித்தாதா  அவர்கள்  கேளிக்கை ?
வீழ்ந்தார்கள்  கடன் சுமையில்
நசிந்து கொண்டிருக்கிறார்கள்   தற்போது

பே சப்பட்டவனோ    தொழிலைச்  சுருக்கி
 வாங்கிய கை மாற்றை  அடைத்து  அமைதியாக
 வருமானத்தைப்  பெருக்கி  வாழ்கிறான்

பெருஞ் சொத்து மிஞ்சினது  அபாரமாக
பெருமிதம் பொங்க  பெரிதும் மதிக்கப்படுகிறான்
மதிப்பும் பெருமையும் பெருக  வாழ்கிறான்  அடக்கமாக

கை தட்டினவர்களுக்கு  இன்று தட்ட ஏதுமில்லை.
 வஞ்சித்தவர்கள்  இன்று  நிற்கிறார்கள் தெருவிலே
.அபகரித்த சொத்து இன்று கை விட்டுப்  போய்  விட்டது.

தடுமாறுகிறார்கள்  தாறு மாறாக இப்போது  முற்றிலும்
பணத்திற்கு பேயாக அலைந்தவர்கள் இப்போது இழந்தார்கள்
பணத்தையும் பெயரையும்  ஒருங்கே

இது இதிகாசமோ காவியமோ அல்ல
இது நாம் யாவரும் காணும் நிகழ்வு
செப்புகிறேன்  கவிதை வடிவிலே  கண்ணால்
 கண்டதை என் அறிவிற்கு எ ட்டிய வகையிலே.


.




No comments:

Post a Comment