Monday, December 23, 2013

தவிப்பது

பெற்ற மூவருக்கும்
 ஒருங்கே யாவும் செய்து 
ஒன்றாக நினைத்து
வேறுபாடு ஏதும் இல்லாமல் 
பாகுபாடு  எவையும் காணாமல்  
ஒன்றுக்கு   இணையாக 
மற்றொன்று என்று கருதி 
 வித்தியசாம் இன்றி  நடத்தி
வளர்த்து நிலைப்படுத்தி 
நிமிரும்  போது 
எனக்கு தான் குறை வைத்தாய்  
எனக்கு அதை கொடுக்கவில்லை 
எனக்கு அதைச் செய்யவில்லை  
என்று குரல் எழும்பியது 
 மனம் நோகாமல்   என்ன செய்வது ?
பெற்றவர்கள் காயப்படுத்திய போதில்  
பொறுத்துக்கொண்ட மனது 
தற்போது பெ ற்  றது   சாட்டும்  குற்றச் சாட்டை 
தாங்க முடியாமல் தவிக்க 
பெற்றவர்களும் பெற்ற துகளும் 
படுத்தும் போது 
மனம் கல்லாகி  மாறியது 
 சலி த்துக் கொண்டே வாடி
 தவிக்கப் போகுவது  திண்ணம் 





தவிப்பது 

No comments:

Post a Comment