Thursday, December 12, 2013

தலை வாயில் நுழைவாயில்

தலை வாயிலில் நின்றாள் 
எழில் மங்கையொருத்தி 
கடைக்கண்ணால் பார்த்தாள் 
அழகிய வாலிபனை 
அவளும் நோக்க 
 அவனும் நோக்க 
கண்ணும் கண்ணும் பேச  
அவள் வெட்கி  நாண 
அவன் விம்மி சிலர்க்க்
காதல் வெள்ளோட்டம்  கண்டது .

தலை வாயில் நுழை  வாயிலாக மாற 
செம்மை படர நங்கை நல்வரவு கூற 
விருப்பத்துடன்  அவன் தன சம்மதம் அளிக்க 
பெற்றோர்களோ  தடைசொல்லி கோபம் அடைய
நிரோடை போன்ற காதல் தெளிவற்று நிற்க 
அவள் கண்ணீர் சொரிய  
அவன் வேதனையடைய  
கண்ணும் கண்ணும்  கரைய 
காதல் மெல்லோட்டத்தில் வந்த வழியே திரும்பியது.



தலை வாயில் நுழைவாயில் 

No comments:

Post a Comment