Friday, October 11, 2013

நீர் இன்றி

கண்மாய்கள் கட்டிடங்கள்  ஆயின .
ஏரிகள் பெருங் கட்டிடங்கள் ஆயின.
ஆறுகள் கட்டிடங்களாக ஆகின்றன
கடலும் கட்டிடங்களாக  ஆகிவிடும்
இன்னும் சிறிது காலத்திலேயே.
நீர் ஒரு  காண  இயலாத சக்தி

ஆலிலைக் கண்ணன்

பாடினான்  பரவசமாக
ஆடினான் ஆனந்தமாக
தன்னை மறந்து
 தன நிலை மறந்து
ஆடிப் பாடினான்

கண்ணீர் மல்க
 உதடுகள்    துடிக்க
இமைகள் படபடக்க
மெய் மறந்து
 ஆடிப் பாடினான்


ஆடும் போது
கண்ணா என்று  கூவினான்
கேசவா என்று அழைத்தான்
 அவன் கண் முன்னே
தோன்றினான் ஆலிலைக் கண்ணன்
குழந்தை வடிவிலே

விமர்சனமும் தரிசனமும்

எவ்வித சலனமின்றி  நடந்த நிகழ்ச்சியில்
 ஏற்பட்டது ஒரு தடுமாற்றம்
சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
வினையாக வந்து வீழ்ந்த்தது
ஒரு விமரிசனம்,
தனியாக எடுத்து நோக்கின்
அது சாதாரணமாகத் தோன்றும்
சொன்ன நேரத்தையும்
 சொன்ன இடத்தையும்
 சொல்லிய விதத்தையும்
எடுத்துக்கொண்டால்
அது மிகவும் தாறு மாறாகத்
 தெரிந்தது மனதை நோக  அடித்தது
சொற்கள்  நாகரிமாக  பயன்படுத்தி
 நயமாக உச்சரிக்க வேண்டும்
வெளியே வந்த பின்
 அது நம்மிடையே இல்லை
 அவை சீறிப் பாய்ந்து
 கிழித்துக்   காயப்படுத்தி
மனத்தைக் குதறி விடும்.

பேசட்டும் தன்னோடு

வெட்ட வெளியில் அமர்ந்து
தன்னாலே பேசும் மனிதனை
 கிறுக்கன் என்று சொல்லலாமா
 வேண்டாம் மனிதனே
 அவன்  கிறுக்கன் அல்ல
 வம்பு வேண்டாம்  என்று
அவன் நினைக்கிறான் போலும்
இல்லை பேசி பேசி
 எதைக் கண்டேன்
என்று எண்ணுகிறான் போலும்
தன்னோடு பேசி
 மனத்தை ஆற்றிக்  கொள்கிறான்
 பாவம் அவனை விட்டு விடுங்கள்
பேசட்டும்  பேசிக்கொன்டிருக்கட்டும்
அல்லலை பகிர்ந்து கொள்ளட்டும்
 இன்பத்தில் பங்களிக்கட்டும்
அழுகட்டும் சிரிக்கட்டும்
அனுபவிக்கட்டும்  நலன் கருதி
அவன் பேசட்டும் தன்னோடே

நடப்பதும் நடந்ததும்

ஒரு பயங்கர வெடிச் சத்தம்
 காதைப் பிளந்து கொண்டு  வந்ததது
 எங்கிருந்து வந்தததோ
 எப்படி வந்ததோ
என்று அறியும் முன்
 மற்ற ஒரு  வெடிச் சத்தம்
அசையும் பொருட்கள் அதன் அகன்ற
 வாயில் புகுந்தன
அசையா வளங்கள் சிதைந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாகக்
 காட்சியளித்தன   யாவையும்.
உணர்ந்து நோக்கினால்
பொருளாதார கெடுவும் நெருக்கடியும்
 மனிதனை எவ்வாறு எல்லாம்
 அலைகழிக்கிறது
இருப்பவன் இல்லாதவனை முழு ங்குகிறான்
அதிகாரம் உள்ளவன் சாமானியனை  விழுங்குகிறான்
இயற்கையைப்  போல.

காளியாய் கண்ணகியாய்

அவள் அழுதாள் குலுங்கி குலுங்கி
அவளை அழுது கண்டதில்லை
திடமான மனதுடன் வளைய  வருபவள்
மனது குன்றி அழுதாள்
  வழியும் கண்ணீரைக்    கருதாமல்
சிந்தும் முக்கை நினையாமல்
 துடிக்கும் உதடை பாராமல்
சிவக்கும் கண்களை   நோக்காமல்
விரைந்தாள்  தன்னை காயப்படித்தினவனை
கேள்வி கேட்க
  கேட்டாள்  ஆத்திரமாக
நீயும் ஒரு மனிதன் தானா ?
பெண் என்று பாராமல்
 மாணவி என்றி எண்ணாமல்
முறை கேடாக நடந்தாயே
 ஆசிரியர் என்ற போர்வையிலே.
காளியாய்  சீறினாள்
கண்ணகியாய்  சுட்டெரித்தாள்
நிலை குலைந்த பெண் மணி .
எரிந்தானா அவன் ?
இன்று இல்லை
 என்றோ ஒரு நாள்
 எரிந்து சாம்பலாவான்
அவளின் காயம் அப்படி
.

விசுவநாதன் வேலை வேண்டும்

காசி விஸ்வநாதருக்கு
 தங்கக் கிரிடம்  சூட்ட
பெற்றார்கள் இலவசமாக
பவுனும் நகையும் எக்கச்சக்கமாக
பெண்மணிகள் அள்ளிக் கொடுக்க
ஊர்  ஊராக   ஊர்வலமாக
கிரிடத்தை கொண்டு செல்ல
பாதி இறைவனுக்கு  படைத்தது
மீதி  பதவியில் இருப்பவர்களுக்கு.
என்று பங்கிட்டு  செழிக்க
விஸ்வநாதன் கூர்மையாக   பார்க்க
உண்டு பண்ணினான் கலகத்தை
கலாட்டா தொடர
நான் நீ என்று ஈஸ்வரனின்
சொத்துக்கு  சண்டை நடக்க
காசி நாதன் புன்னகையுடன்
 காரைக்குடியை நோக்க
மகேசன் தீர்ப்பை  வழங்கும் நேரம்
அவன் ஆளுமை  தெரிய வரும்
 நாளை மாலையில். வெளியாகும்
தேர்தல் முடிவுகள்  ஒரு துடைப்பு
இறைவனையே ஏமாற்றும்  நடிப்பு
தேர்ந்தவனும் பதவி விலகுபவனும்
ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்
பணம் என்றால் நாணயம்
ஓடி விடும் போல்
ஆசை கண்ணைக்   கட்டும்
 இருப்பவனுக்கு இன்னும் வேண்டும்
இல்லாதவனுக்கு  நிறைய  வேண்டும்
விஸ்வநாதனின் வேலை என்ன
 என்பது தெரிய வரும்.
அவனுடைய திருவிளையாட்டு  திறனில்
  எள்ளளவும் சந்தேகம் இல்லை
 அவனுடைய  நீதி   வெள்ளிடைமலை
சொத்தை திண்டினவன் கை முடங்கும்
தின்னவன் வாய் புண்ணாகும்
அனுபவித்தவன்    நெஞ்சு வெடிக்கும்
அடைய நினைப்பவன் அடக்கம் ஆவான்