Friday, October 11, 2013

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்
 என்று புலம்பும் நாம்
 செய்த பாவம் என்ன தானோ ?
நீர் இல்லையேல் உயிரினம் இல்லை
வரப்பு   உயர  நீர் வேண்டும்
பயிர் செழிக்க நீர்  அவசியம்
மனிதன் தாகம் திர்க்க
அவனின் உடல் அழுக்கைப் போக்க
மற்ற   தேவைகளைப்   பூர்த்தி செய்ய
விலங்குகளின்  நிலைக்கும்
அவைகளின் வாழ்வுக்கும்
நீர் ஒரு அத்தியாவசியமான  செயல்பாடு
 நீரின்றி உலகம் இல்லை
நாம் அந்த தேவ அன்பளிப்பை
புறக்கணித்து புறம் தள்ளி
சீரழித்து வீணாக்கி
நச்சுப் பொருட்களை  தேக்கி
அசுத்தப்படுத்தி   கொல்லாமல்
 கொன்று கொண்டிருக்கிறோம்
 தெரிந்து  முக்கால் வாசி
தெரியாமல் கால் வாசி
செத்தவன் பிழைத்துப் பார்த்தோமா!
நீர் வளம் குன்றி  சிறுத்து
 தேய்ந்து  ஓடாகிப் போனது.
தண்ணீர் தண்ணீர் என்று ஏங்குகிறோம்
  இன்று கண்ணீருடன்

அபலையின் வாழ்விலே

பையில் துணி இல்லாமல்
கழுத்தில் தாலிச் சரடு இல்லாமல்
நெற்றியில் திலகம் இல்லாமல்
மெலிந்த உடலும்
 தளர்ந்த  நடையும்
கவலை தோய்ந்த  முகமும்
இடுப்பில் குழந்தையுடன்
 வேகையில்  காசு  இல்லாமல்
க மாக நடக்கிறாள்
அபலைப் பெண்  மிரட்சியுடன்
அதே நேரத்தில் முடிவுடன் .
எங்கு செல்கிறாள்?
 என்று பார்க்கின்
ஒரு பாழுங் கிணற்றை
நோக்கி  நடக்கிறாள்
எதற்கு என்று யோசிக்க
வேண்டியதில்லை
நினைக்கும் முன்
தொபீர்  என்ற சத்தம்
கூடவே ஓர் ஓலம்
 அவளும் பச்சிளங்  குழந்தையும்
 நீரில்லாத  கிணற்றுக்குள்
ஐக்கியம்  ஆகி முக்தி  அடைந்தார்கள்
 வாழ்க சமுதாயம்
வளர்க தமிழ் திரு நாடு.

அமைதியும் அற்புதமும் எளிமையிலே

இளங் காலைப் பொழுதிலே
 நங்கை  ஒருத்தி  தென்றல்  போல்
அன்ன நடை யுடன்
சுகந்த மணத்துடன்
நிதானமான  பார்வையுடன்
 உறுதியான  நோக்குடன்
மிகவும் ஆச்சரியாமான
உடையில் ஆம்
அழகான புடவை உடுத்தி
(இன்று புடவை ஒரு அபூர்வமான  உடை)
நேர்த்தியான நகைகள் அணிந்து
புன்னகை தவழ
சென்ற காட்சி
மனதில் நிற்கிறது
அமைதியான அழகு
என்று சொல்லலாமா
அற்புதமான அழகு
என்று கொள்ளலாமா
எவ்விதத்திலும் அவள்
ஒரு தெய்விகமான
அழகாகத்   தோன்றினாள் .
யாவருக்கும்  ஒரே நேரத்தில்
அழகு  ஆர்பாட்டத்தில் இல்லை
அதித அலங்காரத்த்ல்  இல்லை
விலை மதிப்புடைய அணிகலன்களில் இல்லை
எளிமை ஒரு தனிப்பட்ட அழகு
 அதனுடன் சாதுர்த்தியம் கூட்டும்
அவற்றுடன் கனிவு சேர்க்கும்
இதமான  பேச்சு ஏற்றும்
உணர்வப்   பூர்வமான எண்ணம்  போற்றும் அழகை ஆற்றலுடன்  வழங்கி
 அழகுக்கு அழகு அளித்து
வளமாக கொண்டு செல்லும்
இயற்கை தரும் வெற்றி
இதுவன்றோ !

ஆலோசனையும் பிரசங்கமும்

சற்று நேரம் பொறுங்கள்
 சிறிது நேரம் பாருங்கள்
சில மணித்துளிகள் காத்திருங்கள்
நல்லது நடக்கும்
 நல்லதே நினையுங்கள்
 நன்றாகவே நடக்கும்
என்று பார்க்கிறவர்கள் யாவரும்
 சொல்லும்  பொது  ஆத்திரம்  உண்டாகிறது
பொறுத்திருந்து  என்ன நடந்தது
 இழப்பு தான் மிச்சம்
காத்திருந்து என்ன ஆனது
 பேரிழப்பு தான் மீந்தது
 நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால்
கெட்டது தான்  விரைந்து வருகிறது
சொல்வது மிக எளிது
 அன்பவித்தால்   தான் தெரியம்'
 வலியும் வேதனையும்
பிரசங்கம் செய்பவர்களும்
அலோசனை கூறுபவர்களும்
தங்கள் வாழ்வில்
இருக்கிறார்களோ அவ்வாறு?
ஆயிரம்  பொற்காசு பெற வேண்டிய கேள்வி

மெய்யும் பொய்யும்

உண்மையை சொன்னால்
கோபம் கொள்கிறான்.
அடிக்க வருகிறான்
உண்மை கசக்கும்
கசந்து கண்ணைப் பிடுங்கும்
பொய்யும் ம் நடிப்பும் அமர்க்களம்
தக தக என்று மின்னும்
குளுகுளு என்று குளிர்விக்கும்
வருடினாப் போல் தொடும்
 இதமும் சுகமும் வெகுவாக அளிக்கும்
எவ்வளவு நாட்கள் என்பது தான்  கேள்விக் குறி
 நிழல் மறைந்தவுடன் வெயில் தகிக்கும்
பொய் குறைந்த நாள் வாழ்ந்து
 வெளிக்   கொணர்ந்த பின்
நாய் அடி பேய் அடி பட்டு
 தோலுரித்து தண்டவாளம் ஏறி
மானம் மரியாதை  களைந்து
கழுவேறி  தூக்கிலடப்படும்.
கசந்த உண்மை கசப்பாக  இருந்து
 காலம் வரும் போது  கனிந்து
திகட்டாத இனிமையை நல்கும்
கசப்பு நாளடைவில் இனிமையாக மாறும்
நடிப்பு காலப்போக்கில் நரகமாகத்   தாழும்

இரத்த பந்தம்

உறவு என்று சொன்னால்
 எனக்கு மிகுந்த சொந்தங்கள்
 இரத்த பந்தம் நிறைய
 பிறந்தவர்கள்  ஐந்து
  பாசம் சற்றும்  கண்டதில்லை
இளமையில் கொஞ்சம் இருந்து
 வயதாக முற்றிலும் மாறி
அன்னியனைக் கண்டால் கூட
 ஒரு புன்னகை மலர
 உடன்  பிறந்தவர்களை நோக்கின்
 மட்டில்லா வெறுப்பு
பிறந்தவர்கள் இப்படி
 வந்தவர்களோ மேலும்
 விருத்தி  இணைவில்
வெறுப்போடு காட்டமும் சேர்க்கை
வாழ்ந்தேன் இவ்வுலகில்
மிக வேறுபாட்டுடன்
தனி மனிதன் தோப்பாகாது
ஆனேன் நான்
குழந்தைகளுடன் கணவருடன்
நட்புடன் உண்மையுடன்
பூத்துக் காய்த்து  கனிந்து
குலை தள்ளி விருட்சமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
சுற்றத்தை விட்டு
வெகு தூரம் தள்ளி
இடத்தால் மிக நெருக்கத்தில்
மனத்தால்   தொலை தூரத்தில்
கண்ணுக்கு எட்டாத  என்றால்
 நகைப்புக்கு  இடமாகும்
காதுக்கெட்டாத என்றால்
சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்
 ஏனெனில் அடுத்த வீட்டில்
 அடுத்த சாலையில் இருப்பவர்களை
இல்லாதவர்கள் என்று நினைத்து
வாழ முயன்று  வாழப் பழகி
வெற்றிகரமாக   வாழும் என்னை
 நானே பாராட்டிக் கொள்ள வதுண்டு
பல நேரங்களில் சில வேளைகளில்

காதலின் இலக்காக

காதலித்தது இல்லை
காதலிக்கத்   தெரியவில்லை
காதலிக்க வாய்ப்பில்லை
  காதலிக்க தொடங்கினேன்
மணவாளனை கைப் பிடித்த பின்.
காதல் பெருகி ஓடியது
 வளர்ந்த சூழ்நிலை அவ்வாறு
கண்டிப்பும் கண்காணிப்பும்
இடைவிடா தாயின்  அருகாமையும்
குடும்பப் பாரம்பரியுமும்
காதலுக்கு வழி கோலவில்லை
பெரியோரின் நோக்கிலே திருமணம்
அதன் பின் காதல்  வளர்ந்தது
மிகுந்த  மறைமுகமான பரிமாற்றங்கள்
அதில் ஒரு வெட்கம்
வயது ஏற ஏற அன்பு பெருக
 இன்று ஒருவர்  இல்லமால்
ஒருவரால் வாழ முடியவில்லை
வாழ்கிறோம் காதலின் புனித இலக்காக