Saturday, May 24, 2014

கள்ளன்

காரிருளைக் கண்டு 
கலங்கினான்  கள்ளன் 
துணை வந்த இருள் 
 இன்று  அவனுக்கு 
எமனாக மாறியது.

 துணையும் நல்ல 
 துணையாக இருத்தல் 
இன்பம் சேர்க்கும் 
என்று அறிந்து 
 கொண்டான் கள்ளன்.

திருந்துவான் என்ற 
 நம்பிக்கை துளிர்க்க 
மன மகிழ்வுடன் 
 திரும்பினேன்  
வெளிச்சத்தை நோக்கி 

No comments:

Post a Comment