மந்தரித்தாள் பல வழியில்
பல வகையில் அடிக்கடி
எல்லாம் தனக்கு வேண்டும்
என்ற நோக்கத்தில்
மாமனார் மந்தித்துப் போனார்.
மாமியார் மருக் கோழி யானாள்
வந்தது சொத்து கைக்கு
மகிழ்ந்தாள் , அக மகிழ்ந்தாள்
நிலைத்ததா எல்லாம் ?
இல்லையே !இல்லவே இல்லையே. .
நின்றதா சொத்து அவளிடம்
குடும்பத்தில் பிறந்த பெண்ணை
மோசடி செய்து கிடைத்தது
சென்றது வேகமாக வந்த வழியில்
இன்று அவள் யாவற்றை யும் இழந்து
நிற்கிறாள் அந்தோ பரிதாபமாக!
No comments:
Post a Comment