Wednesday, May 28, 2014

மனதினில் கவலை

 மனதினில் கவலை ஆட்கொள்ள
நெஞ்சம் முழுவதும் சோகம் கவ்வ
தன நிலையிலிருந்து மாறினான் .

வாழ்வே ஒரு போராட்டம் என்ற போதும்
 துணிந்து நின்றான்  தன்னிச்சையாக
இன்று தளர்ந்து விலகி நிற்கிறான்.

ஏன் என்று காணும் போது
வஞ்சனைகள் அவனைக் கொன்றன
ஒளியிழந்து காணப்படுகிறான்  .

வாழ்வை சூது கவ்வும்
பின் ஒவ்வொன்றாகக்  கவிழும்
உறுதியும் கடைசியாகக் கை விடும்.

No comments:

Post a Comment